Friday, January 13, 2012

DMK

தி.மு.க., செய்தது என்ன: ""இத்தனை நாட்களாக சும்மா இருந்துவிட்டு, திடீரென, கேரளா மாநிலம் பீர்மேடு, தேவிகுளம் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார். இப்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், அதற்காக தி.மு.க., செய்தது என்ன என்பது தான் கேள்வி. இவர்கள் செய்ததெல்லாம் அறிக்கைகளும், பேச்சுக்களும், தீர்மானம் நிறைவேற்றியதும் தானே தவிர, மொழிவாரி மாகாணப் பிரிப்புப் போராட்டத்தில், திராவிட இயக்கத் தலைவர்கள் யாரும், ஒரு முறை கூட சிறை சென்றதில்லை. ம.பொ.சி.,க்கும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், தனி திராவிட நாடு கேட்டு இவர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவு தான், தேவிகுளம், பீர்மேடு போன்ற மலைப்பகுதிகள், கேரளாவுக்கு தாரை வார்க்கப்பட்டன. '' -

- அர்ஜுன் சம்பத், நிறுவனர், இந்து மக்கள் கட்சி

No comments:

Post a Comment