Monday, February 7, 2011

புரியாத புரிதலை புரிந்து கொள்ள சில முயற்சிகள்!!

இன்று நாடெங்கும் காட்டுதீ போல் பேசப்படும் பிரச்சனை விலைவாசி உயர்வு!
இதற்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம் என்று குற்றம் சாட்டபடுகிறது.
இதை புரிந்து கொண்டு தான் சொல்கிறார்களா அல்லது யாரோ விசமி கிளப்பி விட்ட வதந்தியா என்று தெரியவில்லை,

ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே ஒரு காரணமல்ல என்பதற்காகவே இந்த பதிவு.

ஒரு நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணத்திர்கேர்ப்ப தங்கம் கையிருப்பு இருக்க வேண்டும் என்பது நியதி, அதை மாற்றியது முதல் குற்றம், மற்ற மாநிலங்களை சாட்சிக்கு கூப்பிடுவதை விட நம் தமிழகத்தை பற்றியே பேசுவோம்.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடம் மட்டுமல்லா எப்போதுமே துண்டு விழாத பட்ஜெட் நம் இந்தியாவில் கிடையாது.
முதல் முட்டாள் தனம் இலவச தொலைகாட்சி பெட்டி, அதை அவர்கள் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும், எங்கிருந்து வரும் காசு,

இரண்டு ரூபாய்க்கு அரிசி உண்மையில் ஏழைகளை சென்றடைகிறதா!?
இட்லி மாவு விற்கும் கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் தான் சப்ளை ஆகிறது,
ரேசன் கடைகளில் நேர்மையாக தான் நடந்து கொள்கிறார்கள், எதாவது வாங்க சென்றால்
அவர்கள் கேட்பது
அரிசி வாங்குவீர்களா ?
இல்லை
இருபது கிலோ போட்டு கொள்ளட்டுமா
நாம் தான் வாங்க போவதில்லையே
சரி போட்டு கொள்ளுங்கள் என்கிறோம், அதே போல் ஐந்து பேரிடம் கேட்டால் ஒரு மூட்டை ஆகி விட்டது, அதை தான் விற்கிறார்கள்.

விவசாயகடன் ரத்து, சரி வங்கிகளுக்கு யார் பணம் குடுப்பார்கள்,
இப்படி பேப்பரை பண நோட்டாக அச்சடித்து அதை வேற்று காகிதமாக்கியது யார்?
இந்த கூறு கெட்ட அரசாங்கம் தான்! எனக்கு எந்த அரசியல்வாதிகள் மேலும் நம்பிக்கையில்லை, தன் பாக்கெட்டை நிரப்பவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

ரேசன் கார்டு வைத்திருப்பவர் அனைவருக்கும் இலவச தொலைகாட்சி பெட்டி என்று ஸ்டாலின் அறிக்கை விடுகிறார், நம் கட்டும் வரிப்பணம் இப்படி நாசமாய் போனால் ஏன் வராது இந்த விலைவாசி உயர்வு.

இவர்கள் இஷ்டத்திற்கு நோட்டு அடிப்பதற்கும், வெளியே ஒருவன் கள்ளநோட்டு அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்,

ஆன்லைன் வர்த்தகத்தை மட்டும் குறை சொல்வது தவறு, அது எல்லா நாட்டிலும் இருக்கிறது, ஆனால் நம் நாட்டில் இருப்பது போல் இந்த அளவு அசுர விலைவாசி உயர்வு எங்கேயும் இல்லை.


அதே நிலம், அதே விவசாயி, அதே பயிர்கள் ஆனால் பத்து வருடத்திற்கு முன் இருந்ததை விட பத்து மடங்கு விலை உயர்வு, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்து விட்டதால் இந்த உயர்வு என்று அறிக்கை விடுகிறார்கள், விட்டால் பட்டினி கிடக்க சொல்லுவார்கள்,

பிரச்சினையின் வேரை விட்டுவிட்டு கிளையை பிடித்து தொங்குவது தான் இந்த அரசியல்வாதிகளின் வேலை. விலைவாசி உயர்வுக்கு அவர்கள் சொல்லும் காரணம் துளியும் உண்மையில்லை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச தொலைகாட்சி தருகிறார்களாம், இலவசமாய் இந்த பெட்டி கிடைக்கும் அரிசி கிலோ நூறு ரூபாய்க்கு விற்கும்

No comments:

Post a Comment